கையாக இறைவனால் கொடுக்கப்பட்ட கூட்டு பொருள். பிராணவாயு கலந்திருப்பதால் நீருக்கு சுவையும், உயிர் தன்மையும் கொண்டுள்ளது. அதைக்கொண்டு இயற்கையே கழிவுகளை நீக்கவும், சுத்தப்படுத்தவும் செய்கிறது. மழை நீர் மேல்பறப்பில் உள்ள அழுக்கு கழிவுகளை அடித்து சென்றாலும், பூமிக்குள் வடிகட்டப்பட்டு சேர்த்து வைக்கபடுகிறது. எந்த எந்த இடத்தில் எந்த தாது உப்புகள் அதிகம் இருக்கின்றதோ அந்த அந்த இடத்துக்குப்படி தாது உப்புக் கரைந்து நீரின் சுவை உண்டாகிறது. சுத்தமான நீர் இளநீரைப் போல குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
